சகல செல்வங்களும் தரும் விநாயகரின் காரியசித்தி மாலை

 

சகல செல்வங்களும் தரும் 

காசிப முனிவர் அருளிய

 விநாயகரின் காரியசித்தி மாலை


விநாயகர் மீது கொண்ட அன்பினால் காசிப முனிவர் எட்டுப்பாடல்களை மனதார பாடினார் இந்தப்பாடல்கள் தான் விநாயகர் காரியசித்தி மாலை என்று அழைக்கப்படுகிறது. விநாயகரின் இந்த காரிய சித்தி மாலை மந்திரத்தை தினமும் காலை  நண்பகல் மாலை என மூன்று வேளை படிப்பவர்களின் அனைத்து செயல்களும் வெற்றியாகும்.  ஆவணி மாதம் சதுர்த்தி தினத்தில் 8 வேளை இம்மந்திரத்தை கூறினால் எண் வகை சித்திகளும் கை கூடும்.  இரண்டு  மாதங்கள் தொடர்ந்து நாள் தோறும் பத்து முறை பாடினால் அரச வசியம் உண்டாகும்.  இரண்டு மாதம் நாள் தோறும் 21 முறை இம்மந்திரத்தை பாடினால்  பொன்,மணி,அணிகலன்கள்,வாகனம்,வீடு,செல்வாக்கு,மக்கள்,அரசாங்கம் என சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது காசிப முனிவரின் அருள்வாக்கு.

தமிழ்கோவில் யூடியுப் சேனலுக்காக காசிப முனிவர் இயற்றி, கச்சியப்ப சிவாச்சாரியார்  மொழிபெயர்த்த விநாயகரின் காரிசித்தி மாலை  மந்திரத்தை 21 முறை பாராயணம் செய்து உங்களுக்கு கொடுப்பது உங்கள் சுபாஷ் சந்தர். நன்றி வணக்கம்.


மந்திரம் :

1. பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன் பால் உதிக்குமோ

   எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ

  சந்த மறை ஆகமங்கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ

   அந்த இறையாம் கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்



2. உலகம் முழுதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும் பொருளென இவ்

   உலகிற் பிறக்கும் விகாரங்கள் உறாத மேலாம் ஒளியாவன்

   உலகம் புரியும் வினைப்பயனை ஊட்டுங்களைகண் எவன் அந்த

   உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.



3.  இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்

தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர் வாழ் பதியும் உறச்செய்யும்

   கடவுள் முதலோர்க் கூறின்றிக் கருமம் எவனால் முடிவுறும் அத்

   தடவு மருப்புக் கணபதி பொன் சரணம் சரணம் அடைகின்றோம்



4.  மூர்த்தி யாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான

   தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்

   ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்

போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்



5.  செய்யும் வினையின் முதல் யாவன் செய்யப்படும் அப் பொருள் யாவன்

 ஐயம் இன்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்

 உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் 

பொய்யில்    இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்



6. வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய

   வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர

 நாத முடிவில் வீற்றிருக்கும் நாதன் எவன் என் குணன் எவன் அப் போத முதலைக்    கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்



7. மண்ணின் ஒர் ஐங் குணமாகி வதிவான் எவன் நீர் இடை நான்காய்

   நண்ணி அமர்வான் எவன் தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்

   எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன்வான் இடை ஒன்றாம்

 அண்ணல் எவன் அக் கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம்



8. பாச அறிவில் பசு அறிவில் பற்றற் கரிய பரன் யாவன்

   பாச அறிவும் பசு அறிவும் பயிலப் பணிக்கும் அவன் யாவன்

   பாச அறிவும் பசு அறிவும் மாற்றி மேலாம் அறிவான

   தேசன் எவன் அக் கணபதியை திகழச் சரணம் அடைகின்றோம்.


-----

Voice : M.K. SUBHASH CHANDER


Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil


 

Post a Comment

புதியது பழையவை

Sports News