சிகரம் தொடும் சிந்தனைகள்


புத்தகத்தைப்பற்றி…

முறையாக பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்கும் கல்வி, மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. வாழ்க்கையின் அனுபவங்கள், சுய முன்னேற்ற வழிகாட்டல்கள், புத்தகங்கள் மற்றும் பயிற்சிகள் போன்றவை மனித வாழ்வை மகிழ்ச்சியும், மனநிறைவும் நிறைந்த வெற்றி வாழ்க்கையாக மாற்றுகின்றன. இத்தகைய சிறந்த நல்வாழ்வுக்கு வழிகாட்டல்களை வழங்கும் வகையில் புகழ்மிக்க நம்பர் 1 நாளிதழ் “தினத்தந்தி” உருவாக்கிய மிகச்சிறந்த நூல்தான் “சிகரம் தொடும் சிந்தனைகள்” ஆகும். இந்த நூலை எழுத்தாளரும், பேராசிரியருமான நெல்லை கவிநேசன் சிறப்பாக எழுதியுள்ளார்.

இந்தநூல் - குறிக்கோள், தீர்வுகள், தொண்டு உள்ளம், கோபம், நன்றி, உறவுகள், ஒப்பீடு, சுய விளம்பரம், விமர்சனங்கள், அலுவலக அரசியல், தற்பெருமை, விருந்தினர்கள், எதிர்பார்ப்புகள், இளமை, குடும்பம், செல்போன் - என பல்வேறு நிலைகளில் சிந்தித்து வாழ்க்கையின் வெற்றி ரகசியங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? அந்தப் பிரச்சினைகளுக்கு காரணங்கள் எவை? பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? என்ற விளக்கங்களும் எளிய உதாரணங்களுடன் இந்தநூல் முழுவதும் நிறைந்திருக்கிறது. இதனால், மாணவ-மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும், பெரியவர்களுக்கும் பெருமளவில் இந்தநூல் நிச்சயம் பயன்படும்.


விலை: ரூபாய்.160/-


Post a Comment

புதியது பழையவை

Sports News