நெல்லை கவிநேசன் எழுதிய "அய்யா வைகுண்டர் வாழ்க்கை வரலாறு"

 அய்யா வைகுண்டர் 
வாழ்க்கை வரலாறு


அன்புமிக்க நெல்லை கவிநேசன் அவர்கள் தினகரன் நாளிதழில் தொடர் கட்டுரையாக எழுதி வெளியிட்ட அய்யா வைகுண்டசுவாமி வரலாற்று கட்டுரைத்தொடர் இப்போது புத்தக வடிவம் பெறுவது குறித்து மிக்க மகிழ்ச்சி.

நூலாசிரியர் நெல்லை கவிநேசன் அவர்களது பணி பாராட்டத்தக்கது. பாமரரும் யாரும் படித்தறியும் வண்ணம் கதைப்போக்கில் வடித்திருக்கும் பாங்கு போற்றத்தக்கதாகும். வரலாற்றை கதையாக்கம் செய்யும்போது வரிகள் மாறுவது இயல்புதான். மூலக்கருத்தில் பேதம் வந்துவிடக்கூடாது. அப்படி ஏதும் அனர்த்தங்கள் விழையவில்லை. அது அய்யா அருள் நலமேதான். ஆசிரியர் இன்னும் பல நூல்களை தமிழுக்கு தந்து தழைத்தோங்கி சிறக்கவும் அய்யா அடிபணிந்து வேண்டுகிறேன். ‘கலியுகத்து கடவுளார் வந்த கதை சாகாதிருக்கும் அன்பர்க்கே’ சாகாத சத்திய உத்தம சாயூட்ச பேறை இப்பேருலகம் பெற அய்யாவின் அன்பு யுகம் மலர புத்தகம் வடித்தோர், படித்தோர் அனைவருக்கும் அனைத்து நலன்களும் கிடைக்க அய்யா பாதம் பணிந்த ஆசிகள்.

(நூலுக்கு வழங்கிய ஆசியுரையில் பூஜிதகுரு. பாலபிரஜாபதி அடிகளார்)


                      மாசி 20 அய்யா ஊர்வல பாடல்கள் 2022 

Post a Comment

புதியது பழையவை

Sports News