முதலமைச்சர் கருணையில்....

முதலமைச்சர் கருணையில்....

முதலமைச்சர் கருணையில்

 கல்லூரி சேர்ந்த பழங்குடி மாணவன்; 

கலந்தாய்வில் நெகிழ்ச்சி.


    ஈரோடு மாவட்டம் பர்கூர் மலை கொங்காடை பழங்குடி கிராமத்து மாணவன் சந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நேரடி உத்திரவால் அந்தியூர் குமரகுரு வேளாண்மை கல்லூரியில் சீட் கிடைத்தது. 4 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் கிடைத்த இந்த சீட்டுக்காக தலைமைச் செயலகமும், கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அரும்பாடு பட்டுள்ளனர்.

     இந்த மாணவனுக்கு சீட் கிடைக்க வேண்டி இப்பல்கலையின் கீழ் இயங்கும் 28 தனியார் கல்லூரிகளுக்கும் கூடுதல் 5 சதவீதம் இடங்கள் வழங்கப்பட்டன. இளங்கலை பட்டப்படிப்பு தமிழ் வழியில் கற்பிக்கும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    இன்று நடந்த கலந்தாய்வில் இந்த  மாணவனுக்காக அரசு இயந்திரமும், பல்கலைக்கழகமும் அரும்பாடுபட்ட விவரங்களை பகிர்ந்து கொண்டனர் பேராசிரியர்கள். இந்த நெகிழ்ச்சித் தருணத்தின் நேரடி காட்சிகளும், மாணவன் மற்றும் பேராசிரியர்களின் அனுபவங்களும் முழுமையாக இக்காணொலியில் உள்ளது.


நன்றி : kadhaivattam TAMIL


Post a Comment

புதியது பழையவை

Sports News