ஆளுமைத் திறன் - பாதை தெரியுது பார்!



புத்தகத்தைப்பற்றி…


“வாழ்க்கையில் சாதிக்க வேண்டும். சிறப்பாக வெற்றிபெற வேண்டும்" - என்ற எண்ணம் எல்லோரிடமும் இயல்பாகவே அமைகிறது. ஆனால், ஒரு சிலரால் மட்டுமே வாழ்க்கையில் சாதனைகள் புரிய முடிகிறது. நினைத்தவற்றை நடைமுறைப்படுத்த இயலாததற்குக் காரணம் என்ன? என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஒரு உண்மை விளங்கும். அதுதான் “பெர்சனாலிட்டி” என்பதாகும்.

“பெர்சனாலிட்டி” எனப்படும் “ஆளுமைத் தன்மை” கொண்டவர்களால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிகள் பெற்று சிறந்த நிலையை அடைய இயலும். “பெர்சனாலிட்டி” என்பது ஒருவரது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியம்? என்பதை உணர்த்தும்வகையில், தமிழின் நம்பர் 1 நாளிதழான தினத்தந்தியில் 185 வாரங்களாக தொடர்ந்து வெளிவந்த கட்டுரைகள் இப்போது புத்தக வடிவம் பெறுகின்றன.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் முதல் எழுத்துக்கூட்டி படிக்கும் சாதாரண வாசகர்கள்வரை விரும்பிப் படித்த இந்தத் தொடர்கட்டுரை “ஆளுமைத்திறன்-பாதை தெரியுது பார்!” என்னும் புத்தக வடிவம் பெற்று பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் புத்தகத்தில் - பெர்சனாலிட்டி என்றால் என்ன-? பெர்சனாலிட்டியை வளர்க்கும் பண்புகள், டீன் ஏஜ் பருவப் பிரச்சினைகள் - என பல முக்கியத் தலைப்புகளில் வாழ்க்கை நிகழ்வுகள் அலசப்பட்டுள்ளது. வாழ்வில் புதுமைகளை உருவாக்கவும், சாதனைகளைப் படைக்கவும் விரும்பும் அனைவருக்கும் “ஆளுமைத்திறன் - பாதை தெரியுது பார்!” என்னும் இந்தநூல் பக்கபலமாக அமையும்.


விலை:  ரூபாய்.170/-

Post a Comment

புதியது பழையவை

Sports News