UPSC தேர்வுகள்-வெற்றிக்கான வழிகள்





புத்தகத்தைப்பற்றி…

பலவிதமான புத்தகங்கள் சந்தையில் குவிந்த வண்ணம் இருக்கும் இந்தக் காலத்திலும், மாணாக்கர்களின் முன்னேற்றத்தை மட்டுமே தனது புத்தகங்களின் மையப்பகுதியாகக்கொண்டு, தொடர்ந்து பல புத்தகங்களை நெல்லை கவிநேசன் அவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

‘போட்டித்தேர்வுகள் என்றாலே பெரிய பள்ளிகளிலும், பெரு நகரங்களிலும் இருப்பவர்களுக்கு மட்டுமே உரியது’ என்ற எண்ணத்தை கிராமப்புற மாணவர்களிடமிருந்து மாற்றுவதற்காக பல முக்கிய         குறிப்புகளை எளிய முறையில் தனது எழுத்தின்மூலம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். பேராசிரியர்.நெல்லை கவிநேசன் அவர்களின் முயற்சியில் உருவான இன்னொரு புத்தகம் - இப்போது உங்கள் கைகளில் தவழும் “UPSC தேர்வுகள்-வெற்றிக்கான வழிகள்” என்னும் தலைப்பு கொண்டதாகும். 

பல்வேறு வேலைவாய்ப்புக்களை தெரிந்துகொள்வதற்கும், அந்த ஒவ்வொரு வேலைவாய்ப்புகள்பற்றி தெளிவாகப் புரிந்துகொண்டு, வெற்றி காண்பதற்கான வழிகாட்டுதலையும் இந்தநூல் அருமையாக படம்பிடித்துக் காட்டுகிறது.   

பேராசிரியர்.டாக்டர்.நெல்லை கவிநேசன் அவர்களின் எழுத்துக்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பாகும். இந்தப் புத்தகத்தின் அனைத்து பக்கங்களும் வேலை தேடும் இளைய சமுதாயத்தினருக்கு பல அரிய தகவல்களை அள்ளித் தருகிறது. பேராசிரியர்.நெல்லை கவிநேசனின் இந்த எழுத்துலகப் பணி மென்மேலும் சிறக்க எனது பணிவான வாழ்த்துக்கள்.
 
(நூல் அணிந்துரையில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மேலாண்மைத்துறை பேராசிரியர் டாக்டர்.N.ராஜலிங்கம் அவர்கள்)

Post a Comment

புதியது பழையவை

Sports News