திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்



தமிழகத்தின் நம்பர் 1 தமிழ் நாளிதழான “தினத்தந்தி”, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில், பல்வேறு துறைகள்சார்ந்த கல்வி வல்லுநர்களைக்கொண்டு ஆண்டுதோறும் “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.


திருச்செந்தூர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் “தினத்தந்தி’ நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி 06.04.2019 அன்று நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியை திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் திரு.சே.சந்தோஷ் பாபு தொடங்கிவைத்து தலைமையுரையாற்றினார். “கல்விப்பணியில் தினத்தந்தி” என்னும் தலைப்பில் தினத்தந்தி தலைமை பொதுமேலாளர் (புரமோசன்ஸ்) திரு.ரெ.தனஞ்செயன் பேசினார். டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி முதல்வர் திருமதி.ஞா.வைஸ்லின் ஜிஜி வரவேற்புரை நிகழ்த்தினார். ஆதித்தனார் கல்வி நிறுவனங்களின் மேலாளர் திரு.வெங்கட்ராமராஜா மற்றும் செயலர் திரு.P.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தொடக்கவிழா நிகழ்ச்சிகள் முடிந்ததும், மாணவ-மாணவிகளுக்கான வேலைவாய்ப்புகள் மற்றும் மேற்படிப்புகளுக்கான வாய்ப்புகள்பற்றி கல்வி வல்லுநர்கள் - “பொறியியல்துறை”பற்றி  டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி பேராசிரியர், திருமதி.உ.லெனின் மார்க்ஷியா, “மருத்துவத்துறை”பற்றி சென்னை செயின்ட் பீட்டர் பல்கலைக்கழகப் பேராசிரியர், முனைவர்.திரு.ஆர்.காயத்ரி, “சட்டத்துறை”பற்றி சேலம், வழக்குரைஞர், முனைவர்.திரு.பி.ஆர்.ஜெயராமன், “கல்விப்பணியில் ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள்” என்னும் தலைப்பில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர், முனைவர்.திரு.பொ.ஜெயந்தி, “கலை மற்றும் அறிவியல் படிப்பு”பற்றி கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி பேராசிரியர், முனைவர் திரு.ச.ஸ்ரீமதி, “விளையாட்டுத்துறை”கள்பற்றி டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி, முதல்வர், டாக்டர்.திரு.செ.பெவின்சன் பேரின்பராஜ், “பட்டயக்கணக்கியல் படிப்பு”பற்றி மதுரை, சார்ட்டர்டு அக்கவுண்டன்ட், கலைமாமணி முனைவர்.திரு.T.தவமணி ஆகியோர் பல்வேறு துறைசார்ந்த தலைப்புகளில் தொடர்ந்து பேசினார்கள். 


 
இதில்,“போட்டித்தேர்வுகளும்-வேலைவாய்ப்பும்” என்னும் தலைப்பில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர்  டாக்டர்.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் விளக்கம் அளித்தார். 

 



இந்நிகழ்ச்சியில், உணவு இடைவேளையின்போது முனைவர்.G.நன்னிலம் கேசவன் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை மதுரையைச்சேர்ந்த புலவர், முனைவர்.வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார்.இந்நிகழ்ச்சியின் முடிவில் திருநெல்வேலி, தினத்தந்தி மேலாளர் திரு.த.ஜனார்த்தனன் நன்றியுரை கூறினார்.

Post a Comment

புதியது பழையவை

Sports News