ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்

ரோகிணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்
 

 

தமிழகத்தின் நம்பர் 1 தமிழ் நாளிதழான “தினத்தந்தி”, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகளின் வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும் வகையில், பல்வேறு துறைகள் சார்ந்த கல்வி வல்லுநர்களைக்கொண்டு ஆண்டுதோறும் “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

 



நாகர்கோயில், அஞ்சுகிராமம் என்ற இடத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் “தினத்தந்தி’ நடத்திய “வெற்றி நிச்சயம்” நிகழ்ச்சி 07.04.2019 அன்று காலை 9மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனைவர்.திரு.செந்தில்வேல் முருகன் தொடங்கி வைத்து தலைமையுரையாற்றினார். “கல்விப்பணியில் தினத்தந்தி” என்னும் தலைப்பில் தினத்தந்தி தலைமை பொதுமேலாளர் (புரமோசன்ஸ்) திரு.ரெ.தனஞ்செயன் பேசினார். ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் முனைவர்.திரு.R.ராஜேஷ் வாழ்த்துரை வழங்கினார். ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி பேராசிரியர் திரு.P.ஜெயக்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். 

தொடக்க விழா நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாணவ-மாணவிகளுக்கான மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்புகள்பற்றி பல்வேறு துறைசார்ந்த கல்வி வல்லுநர்கள் விளக்கம் அளித்தனர். அவற்றில் “பொறியியல்துறை” பற்றி ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் திரு.சி.வெற்றிவேல், “மருத்துவத்துறை” பற்றி சென்னை, செயின்ட் பீட்டர்ஸ் பல்கலைக்கழக மேலாண்மைத்துறைப் பேராசிரியர், முனைவர்.திரு.R.காயத்ரி, “சட்டத்துறை” பற்றி சேலம், வழக்குரைஞர், முனைவர்.திரு.P.R.ஜெயராமன், “கல்விப்பணியில் ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி” என்னும் தலைப்பில்  ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி பேராசிரியர் திரு.R.மீனாட்சி அம்மாள், “பட்டயக்கணக்கியல் படிப்பு”பற்றி மதுரை, சார்ட்டர்டு அக்கவுண்டன்ட், கலைமாமணி முனைவர். திரு.T.தவமணி, “கலை மற்றும் அறிவியல் துறை” பற்றி புனித ஜான்ஸ் கல்லூரி முதல்வர், முனைவர்.திரு.S.ஜான் கென்னடி, “ஹோட்டல் நிர்வாகத்துறை” பற்றி வேலூர், வி.ஐ.டி. கேட்டரிங் அன்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறை பேராசிரியர் திரு.S.முத்தானந்தம் மற்றும் நுழைவுத்தேர்வுகள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தேர்வில் பெற்றிபெறுவதற்கான அரிய ஆலோசனைகளும் இந்நிகழ்ச்சியின்போது கல்வி வல்லுநர்களால் வழங்கப்பட்டன.

இதில், “போட்டித்தேர்வுகளும்-வேலைவாய்ப்பும்” என்ற தலைப்பில் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் டாக்டர்.திரு.S.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசன் விளக்கம் அளித்தார். 



 இந்நிகழ்ச்சியில் உணவு இடைவேளையின்போது நன்னிலம் முனைவர்.திரு.G.கேசவன் பலகுரல் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மதுரையைச் சேர்ந்த முனைவர். புலவர். திரு.வை.சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியின் முடிவில் நாகர்கோயில், தினத்தந்தி மேலாளர் திரு.M.பாலகிருஷ்ணன் நன்றியுரை கூறினார்.



Post a Comment

புதியது பழையவை

Sports News