திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா 20.09.2019 அன்று மாலையில் நடைபெற்றது. கல்லூரி செயலாளர் டாக்டர்.ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர்.டி.எஸ்.மகேந்திரன் வரவேற்று, கல்லூரியின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர்.சந்தோஷ் பாபு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு 437 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப் பேசினார். 

விழாவில் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் டாக்டர்.ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் டாக்டர்.பெவின்சன் பேரின்பராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர்.மரிய செசிலி மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர். 



பட்டம் பெற்ற தனது மாணவர்களுடன் நெல்லை கவிநேசன்






Post a Comment

புதியது பழையவை

Sports News