இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்




புத்தகத்தைப்பற்றி…

உலகில் தலைசிறந்த விஞ்ஞானியாகவும் புகழ்மிக்க குடியரசுத் தலைவராகவும், ஆராய்ச்சி வல்லுநராகவும், தன்னம்பிக்கை நாயகராகவும், சிறந்த சிந்தனையாளராகவும், அற்புதமான எழுத்தாளராகவும், தனது சிறந்த நற்பண்புகளால் நமது நம்பிக்கை நாயகராகவும் திகழ்ந்தவர், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் பாரத்ரத்னா அப்துல்கலாம்.

தமிழ்வழியில் தனது கல்வியை ஆரம்பித்து, தமிழில் அறிவியலைப் படித்து, உலக சாதனைகளை நிகழ்த்திய உத்தமர் அவர். மாணவ, மாணவிகளிடம் நாட்டுப்பற்றை விதைத்து, எழுச்சியை உருவாக்கிய கர்ம வீரர். மகாத்மாவின் மறுவடிவமாக திகழ்ந்து, இளைஞர்களின் வழிகாட்டியாக விளங்குபவர். தமிழ் இலக்கியத்தை இனிமையாகப் பயின்று எல்லா மதங்களையும் தம் மதமாக ஏற்று வாழ்ந்து காட்டிய பத்மஸ்ரீ டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் இளைஞர்களின் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

நெல்லை கவிநேசன் எழுதிய “இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்” என்னும் இந்தநூல் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாற்றையும், வாழ்க்கைப் பாடங்களையும், சீரிய சிந்தனைகளையும், உரை வீச்சுக்களையும் உள்ளடக்கிய அற்புத பெட்டகமாக திகழ்கிறது.


விலை: ரூபாய்.50/-

Post a Comment

புதியது பழையவை

Sports News