திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசியக் கருத்தரங்க மாநாடு

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்
தமிழ் இலக்கியங்களில் கலை பண்பாட்டுப் பதிவுகள்
தேசியக் கருத்தரங்க மாநாடு




                திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தமிழ் இலக்கியங்களில் கலை பண்பாட்டுப் பதிவுகள் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

                திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி தமிழ்த்துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு தலைப்பில் தேசியக் கருத்தரங்க மாநாடு நடத்தி நூல் வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் இக்கல்வி ஆண்டில்தமிழ் இலக்கியங்களில் கலை பண்பாட்டுப் பதிவுகள்என்னும் தேசியக் கருத்தரங்க மாநாட்டினை நடத்தி ஆய்வு நூலை வெளியிட்டது.

                கருத்தரங்க மாநாடு தொடக்க விழாவிற்குக் கல்லூரி   டாக்டர்         சௌ. நாராயணராஜன்( நெல்லை கவிநேசன் )தலைமை தாங்கினார்


தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் கு. கதிரேசன் வரவேற்றுப் பேசினார்







தமிழறிஞர் டாக்டர் மா. இராமச்சந்திரன் ஆய்வு நூலை வெளியிட்டுப் பேசினார்











நாசரேத் எழுத்தாளர் கண்ணகுமார விசுவரூபன் நூலினைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்




 எழுத்தாளர் நெல்லை கவிநேசன் எழுதியவாருங்கள் மேடையில் பேசலாம்என்னும் நூலும் வெளியிடப்பட்டது.


  சமூக சேவகர் இராஜமாதங்கன் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் இராஜேஸ் கடடுரையாளர்களை அறிமுகம் செய்தார்


தமிழ்த்துறைப் பேராசிரியர் டாக்டர் எழிலி நன்றி கூறினார். பேராசிரியர் மகேஸ்வரி. பாசமலர் ஆகியோர் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர்
.
                 கல்லூரிச் செயலர் டாக்டர் . ஜெயக்குமார். கல்வி நிறுவன மேலாளர் திரு தி. வெங்கட்ராமராஜ், கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி. மகேந்திரன் ஆகியோர் வழிகாட்டுதலில் துறைத் தலைவர் டாக்டர் கு. கதிரேசன் கருத்தரங்க மாநாட்டிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

\


                பல்வேறு தலைப்புகளில் எழுதப்பெற்ற நாற்பத்தொரு கட்டுரைகள் கருத்தரங்கில் இடம்பெற்றன.



  நான்கு அமர்வுகளாக நடைபெற்ற கருத்தரங்கிற்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் டாக்டர் மரிய சிசிலி, வாவு வஜிதா வனிதையர் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ஏஞ்சல் லதா, குற்றாலம் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ரேச்சல் மேனகா, தொலை தொடர்பு அலுவலர் பகவதி பாண்டியன் ஆகியோர் அமர்வுத் தலைவர்களாக இருந்தனர்.


நிகழ்ச்சியில் பொருளியில் துறைத் தலைவர் டாக்டர் இரமேஸ்விலங்கியல் துறைத் தலைவர் டாக்டர் சுந்தரவடிவேல்வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் அன்பரசன்கணிதத்துறைத் தலைவர் பசுங்கிளி பாண்டியன்ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் சாந்திஉடற்கல்வி இயக்குநர் ஜிம்ரீவ்ஸ்பேராசிரியர் அந்தோணி சகாய சித்ரா , ஆரோக்கியமேரி பர்ணான்டஸ், மாலைசூடும் பெருமாள், முத்துக்குமார், மருதையா பாண்டியன், சிவஇளங்கோ, ஹெட்ஹேவர் ஆதித்தன், செந்தில்குமார், ஜஸிந் மிஸ்பா, கோடீஸ்பதி, வின்ஸ்டன், சிரில்அருண், திருச்செல்வன், ரூபன், அலுவலகக் கண்காணிப்பாளர் இராஜன் ஆதித்தன், பொன்னுதுரை, பாலமுருகன், பிற கல்லூரி ஆசிரியர், ஆய்வாளர், மாணவர்கள் உள்ளிட்ட 150 -க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்













































Post a Comment

புதியது பழையவை

Sports News