ஆனந்தம் தரும் ஆத்திசூடி-16 - புலவர் சங்கரலிங்கம்.

 

ஆனந்தம் தரும் ஆத்திசூடி-16

 புலவர் சங்கரலிங்கம்.


நுனியளவு செல்


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தான் ஒருவன்.

குடிக்க கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது

அவன் போக வேண்டிய தூரமோ அதிகம்.

குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான்.

தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது.

மிகவும் கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை.

ஒரு கையால் அடித்து இயக்கும்.அடி பம்பும் .அருகே ஒரு  சிறு பாத்திரத்தில்தண்ணீரும் இருந்தது.

ஒரு அட்டையில ஒரு வாசகத்தை எழுதி வைத்திருந்தார்கள்.

பாத்திரத்தில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும்"குடித்து விட்டு மறுபடியும் பாத்திரத்தில்தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்" 

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது...

அந்தத் தண்ணீர் ஊற்றினால்,அது இயங்குமா? தண்ணீர் வருமா?என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது.

அது இயங்கா விட்டால்.அந்தத் கொஞ்சத் தண்ணீரும் வீணாகி விடும்.

அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால்.தாகமும் தணியும்.

உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

அந்தப் பயணி யோசித்தான்.

தண்ணீரைக் குடித்து விடுவதே.புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது.

ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல்.அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து.அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரை நான் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது.

"இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்குஎந்த பயனும் இல்லாமல் போக,காரணமாகி விடுவோம் "என்று மனசாட்சி எச்சரித்தது.

அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை.ஆனது ஆகட்டும் என்று,அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டுஅதை அடித்து இயக்க ஆரம்பித்தான்.



சிறிது நேரம் பிறகே.தண்ணீர் வர ஆரம்பித்தது.தாகம் தீர,வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு..தான் பயணத்திற்காக கொண்டு வந்த குடுவையில் சேகரித்து கொண்டான். அங்கு இருந்த சிறு பாத்திரத்தில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் இந்த பம்பு வேலை செய்கிறது  என்று அந்த அட்டையில் கூடுதலாக எழுதினான்.

அவன் மனம் நிறைந்திருந்தது..

"நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை.பிறருக்கும்,அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும்.எந்த ஒரு நன்மையும் நம்முடன் நின்று விடக் கூடாது.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்".ன்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால்இந்த உலகம் என்றும் இன்பமயமாகி விடும்"

இப்படி இறுதிவரை போராடி இந்த உலகத்திற்கு இன்பம் தருவதால்தான் உலகம் இன்னும் வாழ்கிறது இதைத்தான் பாரதியார் 'நுனியளவு செல்' என்கிறார்.

                                                            -------------------------------------


1 கருத்துகள்

  1. தாகந் தீர்ப்பது ஜீவத்தண்ணீர்!!
    தாகந் தணிப்பதே ஞானத்தண்ணீர்!!!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை

Sports News